கோவிட்-19 (COVID-19) தொற்றுநோயுடன் உள்ளூர் சமூகத்தின் இணைய பயன்பாட்டில் தெளிவான மாற்றம் உள்ளது. பாடசாலைகள் மற்றும் பணியிடங்கள் மூடப்பட்டதன் காரணமாக கடந்த 4 மாதங்களில், பெரும்பான்மையானவர்கள் ஆன்லைன் தளங்கள் வழியாக வேலை செய்ய முயன்றனர்; ஆன்லைன் கற்றல் மற்றும் வேலை நடைமுறைகளைத் தொடங்கினர்; வணிகங்களை நடத்தினர்; வலைத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் செய்தி, தகவல் மற்றும் பொழுதுபோக்குகளை அணுகினர். தற்போது பல இணைய பயனர்கள் (internet users) இருப்பதால், சைபர்/இணைய பாதுகாப்பு (cyber security) பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் முக்கியம். ஏனெனில் சைபர் குற்றங்கள், சைபர் கொடுமைப்படுத்துதல் போன்றவற்றில் அதிகரிப்பு உள்ளது. மீறல்களுக்கு எதிராக எடுக்கக்கூடிய சட்ட நடவடிக்கைகள் குறித்து விழிப்புடன் இருப்பதுடன், சைபர் பாதுகாப்பு சுய பயிற்சி செய்யப்பட வேண்டும். சைபர்ஸ்பேஸில் (cyberspace) அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இலங்கை கணினி தயார்நிலை குழு (Sri Lanka Computer Readiness Team (CERT)) ஏற்கனவே சேவையில் உள்ளது. CERT என்பது பொது மக்களின் இணைய பாதுகாப்பு சிக்கல்களை எதிர்கொள்ள தொடர்பு கொள்வதற்கென பாதுகாப்பு அமைச்சின் கீழ் நிறுவப்பட்ட ஒரு நிறுவனமாகும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், 2019 முதல் 2020 வரையிலான காலத்திற்குள் இலங்கை CERT நிறுவனத்திடம் புகாரளிக்கப்பட்ட இணைய பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்த தகவல்களைக் கோரினோம். அதன்படி, நாங்கள் பெற்ற தகவல்கள் ஜனவரி 2020 முதல் ஜூலை 15, 2020 வரையிலான 7 மாத காலப்பகுதியில் பதிவான சைபர் குற்ற நிகழ்வுகள் 2019 ஆம் ஆண்டில் பதிவான நிகழ்வுகளின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளன என்பதை பிரதிபலிக்கின்றன. இது முந்தைய ஆண்டை விட 110.24% அதிகரிப்பு ஆகும். அனைத்து புகார்களிலும், சமூக ஊடகங்கள் தொடர்பான சைபர் குற்ற புகார்கள் மிகக் கூடுதலாக உள்ளன. ஜூலை 2020 க்குள், 2019 ஆம் ஆண்டிற்கான சமூக ஊடகங்கள் தொடர்பாக பதிவான மொத்த சைபர் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை 63.07% ஆல் அதிகரித்து மொத்தம் 4,547 நிகழ்வுகளாக அதிகரித்துள்ளது. CERT நிறுவனம் அளித்த தகவல்களின் படி, பண மற்றும் மின்னஞ்சல் மோசடிகளும் 80.9% சதவீதம் அதிகரித்துள்ளன. உறுதிப்படுத்தப்பட்டதாக சைபர்-குற்ற பிரிவின் கீழ் எந்த குற்றங்களும் இல்லை என்று அறிக்கை காட்டினாலும், அங்கீகரிக்கப்பட்ட சில நிகழ்வுகள் மறை எண் சதவீதத்தில் (minus percentage) பதிவு செய்யப்பட்டுள்ளன. சைபர் குற்ற சதவீதத்தில் இந்த வளர்ச்சியானது பொதுமக்கள் இணைய பாதுகாப்பில் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கிறது. முக்கியமான விடயம் என்னவென்றால், இலங்கை CERT நிறுவனத்தில் ஆவணப்படுத்தப்பட்ட நிகழ்வுகளாவன பதிவான நிகழ்வுகள் மட்டுமே. உங்கள் சைபர்ஸ்பேஸில் நீங்கள் அச்சுறுத்தப்படும்போது, இது போன்ற ஒரு அதிகாரத்திடம் நீங்கள் ஆலோசனையையும் உதவியையும் பெறுவது எப்போதும் சிறந்தது.
EPF நிதியம் 400 டிரில்லியனை அடைந்ததுடன், ETF நிதியம் 400 பில்லியனை எட்டியது: அவை உறுப்பினர்களுக்கு பயனளிக்காமல் விரிவுபடுத்தப்பட வேண்டுமா?
சமீபத்திய தேர்தல் பிரச்சாரங்களும் மே தின நிகழ்வுகளும் இலங்கையின் தொழிலாளர் படையை முறையாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் நிலைத்தன்மையான சமூகப் பாதுகாப்பு முறைமையின் அவசியத்தை எடுத்துக்காட்டுவதுடன் உறுதிப்படுத்துகின்றன. 1958…
மாத்தறை பொது வைத்தியசாலையின் மருத்துவக் கழிவு விவகாரம்: விசாரணைக்கு அளிக்கப்பட்ட பதில்கள் பொய்யானவை!
ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி உலகெங்கிலும் மருத்துவக் கழிவுகளை அகற்றுவது மிகவும் அவதானமாக மேற்கொள்ளப்படும் ஒரு செயற்பாடாகும். 22 மில்லியன் குடிமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையின் சுகாதார…
அரச நிதி இப்படியும் வீணடிப்பு: 4 முன்னாள் ஜனாதிபதிகளுக்கு 397 தனிப்பட்ட பணியாளர்கள்!
க.பிரசன்னா முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் தொடர்பில் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டுவரும் கருத்துக்கள் அவர்களின் சிறப்புரிமைகளுக்கு அரச நிதி அதிகளவு விரயம் செய்யப்படுவதை வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில், முன்னாள் பிரதமர்கள் மற்றும்…
ஜீவன சக்தி காப்புறுதி திட்டம் மூலம் ஏமாற்றப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள்
க. பிரசன்னா பெருந்தோட்டத் தொழிலாளர்களின் காணி உரிமை, தனி வீடு மற்றும் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் காலங்காலமாக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளமை…
Recent Comments