இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட தகவல் அறிவதற்கான உரிமை மற்றும் தகவல்களை பரிசீலனை செய்வது பற்றிய விடயங்களை உள்ளடக்கிய புலனாய்வு செய்தித் தேடல் தொடர்பாக இளம் ஊடகயிலாளர்களை அறிவூட்டும் வகையிலான மூன்று நாள் பயிற்சி செயலமர் வொன்று 2018 மார்ச் 26, 27 மற்றும்; 28 ஆம் திகதிகளில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தில் நடைபெற்றது.
இந்த பயிற்சி நெறியில் இந்திய எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் சிரேஷ்ட ஊடகவியலாளர் சியம் லால் யதவ் சிறப்பு பயிற்றுவிப்பாளராக கலந்துகொண்டதோடு இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் கமல் லியனாரச்சி, ராய்டர் செய்திச் சேவையைச் சேர்ந்த சிஹார் அனீஸ் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சியை நடத்தினர். இலங்கையின் பல பகுதிகளையும் சேர்ந்த பல்வேறு ஊடகங்களில் பணியாற்றும் ஊடகவியலாளர்பகள் பங்குபற்றிய இந்த பயிற்சி செயலமர்வில் சியம்லால் யதவ் அவரது அனுபவங்களை பகிர்ந்துகொண்டதோடு திறந்த கலந்துரையாடலையும் நடத்தினார்.
புகைப்படங்கள் உள்ளே
Recent Comments