News

கொழும்பு மாநகர சபை மின்னணு வசதியை தவிர்க்கிறதா?

By In

தொழில்நுட்பம் அதன் திட்டவட்டமான நன்மைகளைக் கொண்டுள்ளது; இதற்கு எதிராக வாதிடும் எவரும் இருந்தால் அவ்வாறானோர் எண்ணிக்கையில் மிகக் குறைவு. இன்றுவரை தொழில்நுட்பம் எங்களுக்கு வழங்கிய மிகச் சிறந்த வசதிகளில் ஒன்று மின்னஞ்சல். இவ்வாறான போது, ஒரு தகவல் அதிகாரியிடமிருந்து மின்னஞ்சல் வழியாக அனுப்பப்படும் தகவல் அறியும் உரிமை விண்ணப்பத்திற்கு பதில் பெறுவது ஏன் மிகவும் கடினம்?

அவர்களின் வலைத்தளங்களின்படி பார்த்தால், பெரும்பாலான பொது அதிகாரிகள் மின்னஞ்சல் வசதிகளைக் கொண்டுள்ளனர். இருப்பினும், பெரும்பாலான அரச திணைக்களங்கள் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்களுக்கு அரிதாகவே பதிலளிக்கின்றன என்பதை போதுமான தகவல் அறியும் விண்ணப்பங்களை அனுப்புபவர்கள் நன்கு அறிந்திருப்பர். இதனுடன் ஒப்பிடுகையில், ஒரு காகித அடிப்படையிலான கடிதம் இந்த திணைக்களங்களிடமிருந்து அதிக கவனத்தை ஈர்க்கிறது.

ஒரு சந்தர்ப்பத்தில், குப்பை சேகரிப்பு தொடர்பான தகவல் அறியும் விண்ணப்பம் கொழும்பு மாநகர சபைக்கு மின்னஞ்சல் வழியாக அனுப்பப்பட்டபோது, ​​எந்த பதிலும் கிடைக்கவில்லை. பாரம்பரிய அஞ்சல் சேவையைப் பயன்படுத்தி அச்சிடப்பட்ட விண்ணப்பம் அனுப்பப்பட்ட பின்னரே பதில் கிடைத்தது.

பாரம்பரிய அஞ்சல் (குறிப்பாக நீங்கள் அனைத்து உறைகளையும் சேர்த்தால்) அதிகளவிலான காகிதங்களைப் பயன்படுத்துகிறது. இந்த காகிதங்களில் பெரும்பாலானவை மறுசுழற்சி செய்யப்பட்டிருக்காது. மேலும், தட்டச்சு செய்தபின் ஆவணம் அச்சிடப்பட்டால் அது அச்சுப்பொறி மை மற்றும் மின்சாரம் இரண்டையும் பயன்படுத்துகிறது – மாறாக மின்னஞ்சல் பயன்படுத்தப்பட்டால் மின்சாரம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

அத்துடன் இங்கு நேரத்தின் கேள்வியும் உள்ளது. ‘அனுப்பு’ பொத்தானை (‘Send’ button) கிளிக் செய்யும் நேரத்தை விட, ஒரு மின்னஞ்சல் அதன் இலக்கு மின்னஞ்சல் கணக்கை அடைய மிகச்சிறியளவிலான மேலதிக நேரத்தையே எடுக்கும். இது தகவல் அறியும் விண்ணப்பதாரர், தகவல் அலுவலர் இருவருக்குமே சாதகமாக இருக்கும்.

அப்படியானால், இந்த நவீன காலங்களில் நம் நாட்டில் உள்ள அமைச்சகங்களால் நத்தை அஞ்சலை (snail mail) ஏன் இவ்விதத்தில் வலியுறுத்துகின்றன? இதற்கு காரணம் தொழில்நுட்பத்தில் விருப்பமின்மையா? அல்லது தொழில்நுட்ப அறிவின் பற்றாக்குறையா?

காரணம் எதுவாக இருந்தாலும், நாடு முழுவதிலும் உள்ள தகவல் அலுவலர்கள் மின்னணு அஞ்சல் முறையுடன் தொடர்பு கொள்ள தயாராக இருந்தால் அது பலருக்கும் நன்மை பயக்கும்.

News

EPF நிதியம் 400 டிரில்லியனை அடைந்ததுடன், ETF நிதியம் 400 பில்லியனை எட்டியது: அவை உறுப்பினர்களுக்கு பயனளிக்காமல் விரிவுபடுத்தப்பட வேண்டுமா?

சமீபத்திய தேர்தல் பிரச்சாரங்களும் மே தின நிகழ்வுகளும் இலங்கையின் தொழிலாளர் படையை முறையாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் நிலைத்தன்மையான  சமூகப் பாதுகாப்பு முறைமையின் அவசியத்தை எடுத்துக்காட்டுவதுடன் உறுதிப்படுத்துகின்றன. 1958…

By In
News

மாத்தறை பொது வைத்தியசாலையின் மருத்துவக் கழிவு விவகாரம்: விசாரணைக்கு அளிக்கப்பட்ட பதில்கள் பொய்யானவை!

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி உலகெங்கிலும் மருத்துவக் கழிவுகளை அகற்றுவது மிகவும் அவதானமாக மேற்கொள்ளப்படும் ஒரு செயற்பாடாகும். 22 மில்லியன் குடிமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையின் சுகாதார…

By In
News

அரச நிதி இப்படியும் வீணடிப்பு: 4 முன்னாள் ஜனாதிபதிகளுக்கு 397 தனிப்பட்ட பணியாளர்கள்!

க.பிரசன்னா முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் தொடர்பில் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டுவரும் கருத்துக்கள் அவர்களின் சிறப்புரிமைகளுக்கு அரச நிதி அதிகளவு விரயம் செய்யப்படுவதை வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில், முன்னாள் பிரதமர்கள் மற்றும்…

By In
News

ஜீவன சக்தி காப்புறுதி திட்டம் மூலம் ஏமாற்றப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள்

க. பிரசன்னா பெருந்தோட்டத் தொழிலாளர்களின் காணி உரிமை, தனி வீடு மற்றும் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் காலங்காலமாக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளமை…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *