News

கொழும்பு மாநகர சபை மின்னணு வசதியை தவிர்க்கிறதா?

By In

தொழில்நுட்பம் அதன் திட்டவட்டமான நன்மைகளைக் கொண்டுள்ளது; இதற்கு எதிராக வாதிடும் எவரும் இருந்தால் அவ்வாறானோர் எண்ணிக்கையில் மிகக் குறைவு. இன்றுவரை தொழில்நுட்பம் எங்களுக்கு வழங்கிய மிகச் சிறந்த வசதிகளில் ஒன்று மின்னஞ்சல். இவ்வாறான போது, ஒரு தகவல் அதிகாரியிடமிருந்து மின்னஞ்சல் வழியாக அனுப்பப்படும் தகவல் அறியும் உரிமை விண்ணப்பத்திற்கு பதில் பெறுவது ஏன் மிகவும் கடினம்?

அவர்களின் வலைத்தளங்களின்படி பார்த்தால், பெரும்பாலான பொது அதிகாரிகள் மின்னஞ்சல் வசதிகளைக் கொண்டுள்ளனர். இருப்பினும், பெரும்பாலான அரச திணைக்களங்கள் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்களுக்கு அரிதாகவே பதிலளிக்கின்றன என்பதை போதுமான தகவல் அறியும் விண்ணப்பங்களை அனுப்புபவர்கள் நன்கு அறிந்திருப்பர். இதனுடன் ஒப்பிடுகையில், ஒரு காகித அடிப்படையிலான கடிதம் இந்த திணைக்களங்களிடமிருந்து அதிக கவனத்தை ஈர்க்கிறது.

ஒரு சந்தர்ப்பத்தில், குப்பை சேகரிப்பு தொடர்பான தகவல் அறியும் விண்ணப்பம் கொழும்பு மாநகர சபைக்கு மின்னஞ்சல் வழியாக அனுப்பப்பட்டபோது, ​​எந்த பதிலும் கிடைக்கவில்லை. பாரம்பரிய அஞ்சல் சேவையைப் பயன்படுத்தி அச்சிடப்பட்ட விண்ணப்பம் அனுப்பப்பட்ட பின்னரே பதில் கிடைத்தது.

பாரம்பரிய அஞ்சல் (குறிப்பாக நீங்கள் அனைத்து உறைகளையும் சேர்த்தால்) அதிகளவிலான காகிதங்களைப் பயன்படுத்துகிறது. இந்த காகிதங்களில் பெரும்பாலானவை மறுசுழற்சி செய்யப்பட்டிருக்காது. மேலும், தட்டச்சு செய்தபின் ஆவணம் அச்சிடப்பட்டால் அது அச்சுப்பொறி மை மற்றும் மின்சாரம் இரண்டையும் பயன்படுத்துகிறது – மாறாக மின்னஞ்சல் பயன்படுத்தப்பட்டால் மின்சாரம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

அத்துடன் இங்கு நேரத்தின் கேள்வியும் உள்ளது. ‘அனுப்பு’ பொத்தானை (‘Send’ button) கிளிக் செய்யும் நேரத்தை விட, ஒரு மின்னஞ்சல் அதன் இலக்கு மின்னஞ்சல் கணக்கை அடைய மிகச்சிறியளவிலான மேலதிக நேரத்தையே எடுக்கும். இது தகவல் அறியும் விண்ணப்பதாரர், தகவல் அலுவலர் இருவருக்குமே சாதகமாக இருக்கும்.

அப்படியானால், இந்த நவீன காலங்களில் நம் நாட்டில் உள்ள அமைச்சகங்களால் நத்தை அஞ்சலை (snail mail) ஏன் இவ்விதத்தில் வலியுறுத்துகின்றன? இதற்கு காரணம் தொழில்நுட்பத்தில் விருப்பமின்மையா? அல்லது தொழில்நுட்ப அறிவின் பற்றாக்குறையா?

காரணம் எதுவாக இருந்தாலும், நாடு முழுவதிலும் உள்ள தகவல் அலுவலர்கள் மின்னணு அஞ்சல் முறையுடன் தொடர்பு கொள்ள தயாராக இருந்தால் அது பலருக்கும் நன்மை பயக்கும்.

News

10 வருடங்களில் பொலிஸ் சேவையில் இருந்து 2847 பேர் இடைநிறுத்தம்!

ந.லோகதயாளன் கடந்த 10 ஆண்டுகளில்  பொலிஸ் திணைக்களத்தில் இருந்து 2847 பேர் பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் திணைக்களத்தின் தலைமையகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவல்…

By In
News

போதையில் மூழ்கும் சமூகம்;  அதிர்ச்சி தரும் புள்ளிவிபரங்கள்

2023ஆம் ஆண்டு மாத்திரம் 162,088 பேர் கைது! மொஹமட் ஆஷிக் போதைப்பொருள் விவகாரம் இலங்கையில் மட்டுமன்றி அனைத்து நாடுகளிலும் பாரிய நெருக்கடியாக உள்ளது. எமது நாட்டில், அதை…

By In
News

பூமியை நான்கு தடவைகள் சுற்றிவரும் அளவிற்கு இலங்கையை வானில் சுற்றியுள்ள மஹிந்த ராஜபக்ஷ

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி விமானப்படைத் தலைமையகத்திலிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம்…

By In
News

ஜனாதிபதி அலுவலகத்தின் சொகுசு வாகனங்கள் ஏலத்திற்கு முன்னர் பகிர்ந்தளிக்கப்பட்ட விதம்!

● கோட்டாபயவின் பிரத்தியேக பணியாளர்களுக்கு 11 வாகனங்கள் ● ரணிலின் பிரத்தியேக பணிக்குழாமிற்கு 68 வாகனங்கள் ஜனக சுரங்க வாகனங்களை பொதுவாக காட்சியறைகளில் வைத்தே பொதுமக்களுக்கு காட்சிப்படுத்துவர்….

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *