News

குளத்தை திருத்தம் செய்ய உதவிய தகவல் சட்டம்

By In

நகரவாக்கம் காரணமாக நாட்டில் பின்தங்கிய பகுதிகளில் நடைமுறையில் இருந்து வரும் மரபு ரீதியான விவசாயம் மறைந்து வருகின்றது. இத்துறையை பாதுகாப்பதற்காக அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற உதவிகளிலான குறைபாடு மற்றும் பாதுகாப்பதற்காக போதியளவு கவனம் செலுத்தப்படாமை போன்ற காரணிகளால் இந்நிலை ஏற்பட்டிருக்கின்றது.
ஒரு காலகட்டத்தில் இலங்கையின் தானியக் களஞ்சியம் என்றழைக்கப்பட்ட ஊவா மாகாணத்தில் இலட்சக் கணக்கிலான ஏக்கர்களில் விவசாய செய்கை பன்னப்பட்டு வந்ததால் விவசாயத்திற்கும் உணவு உற்பத்திக்கும் பேயர் போன பிரதேசமாக வெல்லஸ்ஸ என்று அழைக்கப்பட்டது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் நகரமயவாக்கம் வயல்களை ஆக்கிரமித்ததால் அங்கே வயல் வெளிகளை காண முடிவதில்லை.
வாழ்க்கை முறையில் நகர மயவாக்கம் மாற்றத்தை கொண்டு வந்தாலும் மரபு ரீதியான விவசாயிகள் தொடர்ந்தும் வயல் நிலங்களிலும் விவசாய நிலத்திலும் பயிர்ச் செய்கைகளில் ஈடபட்டு வருகின்றார்கள். அதன் மூலம் ஆறுவடை செய்து தங்களது தேவைகளை நிறைவு செய்து கொள்கின்றார்கள்.
முறையான நீர் வசதி இன்மை காரணமாக அவர்கள் இத்தகைய விவசாய நடவடிக்கைகளை கைவிட்டு விட்டு வேறு தொழில்களிலும் நாட்டம் காட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறான நிலைக்குள்ளான 50 குடும்பங்கள் அளவில் வினிதகம பகுதியில் அமைந்துள்ள வியாதிகுண கிராமத்தில் வாழ்ந்து வருகின்றனர். வேபெத்த குளத்தில் இருந்து இந்த குடும்பங்களின் விவசாய நடவடிக்கைகளுக்கு போதுமான நீர் கிடைத்து வந்தாலும் இந்த குளம் கடந்த பல வருடங்களாக கைவிடப்பட்ட நிலையில் இருந்து வருவதால் கவனிப்பாரற்ற நிலைக்கு உள்ளாகி இருக்கின்றது. அதனால் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை தடுப்பதற்காக குளம் உடனடியாக திருத்தம் செய்யப்பட வேண்டும்.
குளத்தை துப்புறவு செய்து புணரமைப்பு செய்யுமாறு அரசியல்வாதிகளுக்கு கிராமவாசிகள் பலமுறை வேண்டுகோள் விடுத்தாலும் அவை அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருந்து வருகின்றது. இந்த பிரச்சினை தொடர்பாக கவனம் செலுத்தும் வகையில் தகவல் அறிவதற்கான சட்டத்தை பயன்படுத்தி நிவாரணம் தேடுவதற்கு அவர்கள் திட்டமிட்டனர். அவர்களுக்கு அபிபரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் குழுவொன்று உதவி செய்ய முன்வந்தது. இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் அமெரிக்க உதவித் திட்டத்துடன் இணைந்து தகவல் அறிவதற்கான சட்டம் பற்றி பயிற்சி செயலமர்வொன்றை நடத்தியது. அந்த செயலமர்வில் பங்குபற்றிய அப்பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்களே இவ்வாறு உதவி செய்ய முன்வந்தவர்களாவர்.
அதன்படி அவர்கள் ஊவா மாகாண விவசாய திணைக்களத்திடம் தகவல் அறிவதற்கான விண்ணப்பப் படிவம் ஒன்றை சமர்ப்பித்து நீண்ட காலமாக குளம் புணரமைக்கப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் மோசமாக இருப்பதற்கான காரணம் என்ன என்பதை வினவினர். எவ்வாறாயினும் அவர்களால் எதிர்பார்த்த பதில் கிடைகக்வில்லை. தகவல் கோரப்பட்டதற்கிணங்க உரிய காலத்தில் அவர்களால் தகவல் வழங்க முடியவில்லை என்று விவசாய திணைக்களம் விண்ணப்பதாரிகளுக்கு அறிவித்தது.
அத்துடன் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் தகவல் அதிகாரிக்கும் அது தொடர்பாக தகவல் கோரும் விண்ணப்பம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது. அனாலும் இதுவரையில் விளக்கம் கொடுக்கப்படவில்லை. இருந்தாலும் விவசாயிகள் அவர்களது பிரச்சினைக்கு தகவல் அறியும் சட்டம் உதவியாக இருக்கும் என்று கருதுவதோடு உரிய இலக்காக்கள் பதிலளிக்கும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் இருந்து வருகின்றனர்.
எவ்வாறாயினும் இளைஞர்கள் அவர்களுக்கு தகவல் அறிவதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழிகாட்டி மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றனர். அத்துடன் பிரதேசவாசிகள் அரச துறை அதிகாரிகளை கேள்வி எழுப்ப முடியாது என்று கருதி வந்த நிலையை மாற்றியமைத்து எந்த நேரத்திலும் மக்களின் பிரச்சினை தொடர்பாக அதிகாரிகளை தகவல் கோருவதன் மூலம் கேள்வி எழுப்ப முடியும் என்ற அடிப்படையில் ஊக்குவித்தி ருக்கின்றனர்.
இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் அமெரிக்க உதவித் திட்டத்துடன் இணைந்து தகவல் அறிவதற்கான சட்டம் பற்றி பயிற்சி செயலமர்வொன்றை நடத்தியது. அந்த செயலமர்வில் பங்குபற்றிய அப்பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்களால் இந்த தகவல் சமர்ப்பிக்கப்பட்டது.

News

யாழ். வைத்தியசாலையின் கழிவகற்றலுக்கு 2023 இல் 7 கோடி ரூபா செலவு!

ந.லோகதயாளன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கழிவகற்றல் செயல்பாட்டிற்கு கடந்த வருடம் 7 கோடி ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளமை தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள…

By In
News

முன்னாள் ஜனாதிபதிகள் அனுபவிக்கும் சலுகைகள் என்ன?

க.பிரசன்னா முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் தொடர்பில் சர்ச்சைகள் நீண்டு செல்லும் நிலையில் தொடர்ச்சியாக அவர்களுக்கான சலுகைகளுக்கு அதிக நிதியொதுக்கீடுகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. முன்னாள் ஜனாதிபதிகளுக்கான…

By In
News

அரச வைத்தியசாலையில் சேரிக்கப்படும் குருதி  தனியார் வைத்தியசாலைகளுக்கும் வழங்கப்படுகிறது

ந.லோகதயாளன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு தானமாக கிடைக்கும் குருதியில் ஒரு பகுதி தனியார் வைத்தியசாலைகளுக்கும் வழங்கப்படுவது தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ளது.  யாழ். குடாநாட்டில்…

By In
News

20 அரச நிறுவனங்களின் மூலம் அரசாங்கத்துக்கு 85 ஆயிரம் கோடி ரூபா இழப்பு!

க.பிரசன்னா நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக இலங்கை தற்போது சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனை பெற்றுக்கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. மறுபுறம் அரசுக்கு அதிக செலவை…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *