News

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை பற்றிய தகவல் கோரல்

By In

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையானது இலங்கையில் அதிக போட்டி நிறைந்த ஒரு பரீட்சையாவதோடு ஆரம்ப பாடசாலைகளில் (ஐந்தாம் வகுப்பு வரையான) இறுதி வருட வகுப்புமாகும். இப்பரீட்சை கல்வி அமைச்சின் கீழ் உள்ள இலங்கை பரீட்சை திணைக்களத்தால் நடத்தப்படுகின்றது. இந்த பரீட்சை முடிவுகளின் பின்னர் வெளயிடப்படுகின்ற வெட்டுப் புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு பிரபல்யம் வாய்ந்த முன்னணிப் பாடசாலைகளுக்கான அனுமதி வழங்கப்படுகின்றது. அதன் காரணமாகவே ஐந்தாம் வகுப்பு புலமைப் பரிசில் பரீட்சை இந்தளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருப்படுகின்றது. இந்த இலட்சியத்தை அடிப்படையாக வைத்து பிரதான பாடசாலைகளுக்கு அனுமதி பெறும் நோக்கில் சில மாணவர்கள் திறமையாக படித்து அதிகபட்ச புள்ளிகளைப் பெறுகின்றனர்.
மிகவும் திறமையாக படித்து பரீட்சைக்கு தோற்றிய “smart kid” ஒரு மாணவரின் பெற்றார் தகவல் அறிவதற்கான விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பித்து பிள்ளையின் பரிட்சையில் பெற்றுக்கொண்ட புள்ளிகளைப் பார்ப்பதற்காக விடை எழுதப்பட்ட வினாப் பத்திரத்தினை அல்லது அதன் பிரதி ஒன்றை கோரி இருந்தார். ஏனெனில் பரீட்சை முடிவை விட அவரது மகள் திறமையான முறையில் பரீட்சையை எழுதி இருந்தார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்த கோரிக்கையை செய்திருந்தார்.
ஆனாலும் அத்தகைய தகவலை வழங்க இலங்கை பரீட்சை திணைக்களம் மறுத்த போது அவர் மீண்டும் தகவல் அறிவதற்கான விண்ணப்பம் மூலம் குழந்தை விண்ணப்பதாரியாக சிறுவர் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் அதே கோரிக்கையை விடுத்தார்.
அவரின் வாதத்தின் படி குழந்தையின் பரீட்சை விடைத்தாள்கள் முறையே பகுதி ஒன்று மற்றும் பகுதி இரண்டு ஆகியன மாற்றி தவறான முறையில் இணைக் கப்பட்டதாகவும் அதனால் இரண்டு வினாப் பத்திரங்களையும் வெவ்வேறாக பார்வையிட்டு அவை இரண்டிலும் குழந்தையின் கையெழுத்து சரியாக இருக்கின்றதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவரின் தகவல் கோரல் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி இலங்கை பரீட்சை திணைக்களம் பரீட்சாத்தியையும் அவரது பெற்றோரையும் அழைத்து விடை எழுதப்பட்ட பத்திரங்களை பார்வையிட்டு கையெழுத்தை உறுதிப்படுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. பெயர் குறிப்பிடப்பட்ட தகவல் அதிகாரியை சந்தித்து உரிய விடை எழுதப்பட்ட பத்திரத்தை பார்வையிட்டு மேலும் பல விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டது.
அதன்போது பிழையான முறையில் புள்ளிகள் இடப்பட்டிருந்தமை மற்றும் புள்ளிகளை கூட்டி மொத்த தொகை கணிப்பீடு என்பவற்றில் தவறுகள் நிகழ்ந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டு மேலதிக நடவடிக்கை எடுக்க சுட்டிக் காட்டப்பட்டது. ஆனாலும் அது தொடர்பாக இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எவ்வாறாயினும் இந்த அடிப்படையில் தகவல் கோரியதால் அநீதி நடந்திருப்பது தெரியவந்திருப்பதோடு விசாரணை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. ஆனாலும் திருப்திகரமான பதில் வழங்கப்படவில்லை. இலங்கை பரீட்சை திணைக்களம் பாதிக்கப்பட்டுள்ள பிள்ளைக்கு நீதியை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பில் இருக்கின்றது.
இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் அமெரிக்க உதவித் திட்டத்துடன் இணைந்து தகவல் அறிவதற்கான சட்டம் பற்றி பயிற்சி செயலமர்வொன்றை நடத்தியது. அந்த செயலமர்வில் பங்குபற்றிய ஒருவர் தகவல் அறிவதற்கான உரிமை சட்டம் பற்றி அறிந்து கொண்டவுடன் அந்த சட்டத்தை பன்படுத்தி இலங்கை பரீட்சை திணைகக்ளத்தில் தகவல் கேரியமை தொடர்பாக வழங்கிய விடயம் இதுவாகும்.

News

ஜீவன சக்தி காப்புறுதி திட்டம் மூலம் ஏமாற்றப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள்

க. பிரசன்னா பெருந்தோட்டத் தொழிலாளர்களின் காணி உரிமை, தனி வீடு மற்றும் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் காலங்காலமாக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளமை…

By In
News

போலியான தகவல் வழங்கிய அஸ்வெசும பயனாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

க.பிரசன்னா கடந்த காலங்களில் அஸ்வெசும கொடுப்பனவு வழங்கும் திட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் காணப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக போலியான தகவல்களை வழங்கி தகுதியற்ற நபர்களும் அஸ்வெசும கொடுப்பனவை…

By In
News

 ரணில் விக்ரமசிங்கவின் ஓய்வூதியம்

– ஜனக சுரங்க இலங்கையின் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க, கடந்த காலங்களில் பிரதமர், பாராளுமன்ற உறுப்பினர் என பல்வேறு…

By In
News

18 வருடங்களாக நிர்மாணிக்கப்படும் மெரைன் டிரைவ் வீதி

க. பிரசன்னா கொழும்பு – காலி பிரதான வீதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான சிறந்த வழி என அடையாளம் காணப்பட்ட கரையோர வீதியின் (மெரைன் டிரைவ்) ஆறு…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *