News

எந்த மொழியில் தகவல் அறியும் உரிமை?

By In

இலங்கையில் தகவல் அறியும் உரிமைக்கான அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூன்று மொழிகளில் வெவ்வேறு வகையான RTI படிவங்களை வழங்குகிறது. வலைத்தளத்திலிருந்து ஒரு ‘தகவல் விண்ணப்பம்’ படிவத்தை (RTI-01 படிவம்) பதிவிறக்கம் செய்து பார்க்கும்போது, ​​படிவத்தில் உள்ள பகுதி 07 “வேண்டுகோளை மேற்கொள்பவர் தகவலை பெற விரும்பும் மொழி” என்று கேட்கிறது. விண்ணப்பதாரர் தங்கள் தகவல் கோரிக்கைக்கான பதிலைப் பெற (இலங்கையில் பிரதானமாக பயன்படுத்தப்படுகிற) மூன்று மொழிகளில் எம்மொழியினை விரும்புவர் என குறிப்பிட இது அனுமதிக்கிறது.

இருப்பினும், இந்த விவரக்குறிப்பை செய்தபோதிலும், தகவல் கோருபவர் எப்போதும் அவர் குறிப்பிட்ட மொழியில் பொது அதிகாரியிடமிருந்து தகவல்களை பெறுவார் என்று கூற முடியாது. தகவல் அறியும் படிவத்தில் கோரிக்கையாளர் தகவல்களை பெற விரும்பும் மொழி குறிப்பிட்ட பல சந்தர்ப்பங்களில் ஒரே அனுபவம் தெரிவிக்கப்பட்டது; ‘முடிவு நிலுவையில்’ கடிதம் மற்றும் தகவல்களைக் கொண்ட கடிதம் இரண்டுமே கோரிக்கையாளர் விண்ணப்பப் படிவத்தில் கூறியதைத் தவிர வேறு மொழியில் பெறப்பட்டுள்ளன.

தகவல் அறியும் சேவைகள் தொடர்பாக பொது அதிகாரிகளின் பணியமர்த்தல் நடைமுறைகள் குறித்து மேலும் அறிய, ஒரு தகவல் அறியும் உரிமை விண்ணப்பம் இலங்கை தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இலங்கையில் உள்ள அனைத்து பொது அதிகாரங்களும் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தகவல் அறியும் உரிமை விண்ணப்பத்திற்கு பதிலளிக்கக்கூடிய தகவல் அதிகாரிகளை பணியமர்த்துவதை உறுதி செய்கிறார்களா என்று விண்ணப்பம் விசாரித்தது. இதற்கு தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு, தகவல் அதிகாரியாக ஒரு பொருத்தமான மூத்த அதிகாரியை நியமிப்பது பொது அதிகாரத்தினதே பொறுப்பு என்று பதிலளித்தது.

தகவல் அறியும் விண்ணப்பத்தில் கோரப்பட்ட மொழியில் தகவல்களை வழங்கக்கூடிய ஒரு தகவல் அதிகாரியை ஒரு பொது அதிகாரசபை கொண்டிருக்கவில்லை என்றால் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கேட்கப்பட்டது. இதற்கு, பொது அதிகாரிகள் மொழிபெயர்ப்பு வேலைகளுக்கு மொழிபெயர்ப்பாளர்களை பயன்படுத்துகிறார்கள் என்று தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு பதிலளித்தது. அத்துடன், எந்தவொரு கடிதப் பரிமாற்றத்திற்கும் (correspondence) பொது அதிகாரிகள் அது சமர்ப்பிக்கப்பட்ட மொழியிலேயே (சிங்களம், தமிழ் அல்லது ஆங்கிலம்) பதிலளிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டது.

News

EPF நிதியம் 400 டிரில்லியனை அடைந்ததுடன், ETF நிதியம் 400 பில்லியனை எட்டியது: அவை உறுப்பினர்களுக்கு பயனளிக்காமல் விரிவுபடுத்தப்பட வேண்டுமா?

சமீபத்திய தேர்தல் பிரச்சாரங்களும் மே தின நிகழ்வுகளும் இலங்கையின் தொழிலாளர் படையை முறையாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் நிலைத்தன்மையான  சமூகப் பாதுகாப்பு முறைமையின் அவசியத்தை எடுத்துக்காட்டுவதுடன் உறுதிப்படுத்துகின்றன. 1958…

By In
News

மாத்தறை பொது வைத்தியசாலையின் மருத்துவக் கழிவு விவகாரம்: விசாரணைக்கு அளிக்கப்பட்ட பதில்கள் பொய்யானவை!

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி உலகெங்கிலும் மருத்துவக் கழிவுகளை அகற்றுவது மிகவும் அவதானமாக மேற்கொள்ளப்படும் ஒரு செயற்பாடாகும். 22 மில்லியன் குடிமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையின் சுகாதார…

By In
News

அரச நிதி இப்படியும் வீணடிப்பு: 4 முன்னாள் ஜனாதிபதிகளுக்கு 397 தனிப்பட்ட பணியாளர்கள்!

க.பிரசன்னா முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் தொடர்பில் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டுவரும் கருத்துக்கள் அவர்களின் சிறப்புரிமைகளுக்கு அரச நிதி அதிகளவு விரயம் செய்யப்படுவதை வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில், முன்னாள் பிரதமர்கள் மற்றும்…

By In
News

ஜீவன சக்தி காப்புறுதி திட்டம் மூலம் ஏமாற்றப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள்

க. பிரசன்னா பெருந்தோட்டத் தொழிலாளர்களின் காணி உரிமை, தனி வீடு மற்றும் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் காலங்காலமாக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளமை…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *