News

எந்த மொழியில் தகவல் அறியும் உரிமை?

By In

இலங்கையில் தகவல் அறியும் உரிமைக்கான அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூன்று மொழிகளில் வெவ்வேறு வகையான RTI படிவங்களை வழங்குகிறது. வலைத்தளத்திலிருந்து ஒரு ‘தகவல் விண்ணப்பம்’ படிவத்தை (RTI-01 படிவம்) பதிவிறக்கம் செய்து பார்க்கும்போது, ​​படிவத்தில் உள்ள பகுதி 07 “வேண்டுகோளை மேற்கொள்பவர் தகவலை பெற விரும்பும் மொழி” என்று கேட்கிறது. விண்ணப்பதாரர் தங்கள் தகவல் கோரிக்கைக்கான பதிலைப் பெற (இலங்கையில் பிரதானமாக பயன்படுத்தப்படுகிற) மூன்று மொழிகளில் எம்மொழியினை விரும்புவர் என குறிப்பிட இது அனுமதிக்கிறது.

இருப்பினும், இந்த விவரக்குறிப்பை செய்தபோதிலும், தகவல் கோருபவர் எப்போதும் அவர் குறிப்பிட்ட மொழியில் பொது அதிகாரியிடமிருந்து தகவல்களை பெறுவார் என்று கூற முடியாது. தகவல் அறியும் படிவத்தில் கோரிக்கையாளர் தகவல்களை பெற விரும்பும் மொழி குறிப்பிட்ட பல சந்தர்ப்பங்களில் ஒரே அனுபவம் தெரிவிக்கப்பட்டது; ‘முடிவு நிலுவையில்’ கடிதம் மற்றும் தகவல்களைக் கொண்ட கடிதம் இரண்டுமே கோரிக்கையாளர் விண்ணப்பப் படிவத்தில் கூறியதைத் தவிர வேறு மொழியில் பெறப்பட்டுள்ளன.

தகவல் அறியும் சேவைகள் தொடர்பாக பொது அதிகாரிகளின் பணியமர்த்தல் நடைமுறைகள் குறித்து மேலும் அறிய, ஒரு தகவல் அறியும் உரிமை விண்ணப்பம் இலங்கை தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இலங்கையில் உள்ள அனைத்து பொது அதிகாரங்களும் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தகவல் அறியும் உரிமை விண்ணப்பத்திற்கு பதிலளிக்கக்கூடிய தகவல் அதிகாரிகளை பணியமர்த்துவதை உறுதி செய்கிறார்களா என்று விண்ணப்பம் விசாரித்தது. இதற்கு தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு, தகவல் அதிகாரியாக ஒரு பொருத்தமான மூத்த அதிகாரியை நியமிப்பது பொது அதிகாரத்தினதே பொறுப்பு என்று பதிலளித்தது.

தகவல் அறியும் விண்ணப்பத்தில் கோரப்பட்ட மொழியில் தகவல்களை வழங்கக்கூடிய ஒரு தகவல் அதிகாரியை ஒரு பொது அதிகாரசபை கொண்டிருக்கவில்லை என்றால் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கேட்கப்பட்டது. இதற்கு, பொது அதிகாரிகள் மொழிபெயர்ப்பு வேலைகளுக்கு மொழிபெயர்ப்பாளர்களை பயன்படுத்துகிறார்கள் என்று தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு பதிலளித்தது. அத்துடன், எந்தவொரு கடிதப் பரிமாற்றத்திற்கும் (correspondence) பொது அதிகாரிகள் அது சமர்ப்பிக்கப்பட்ட மொழியிலேயே (சிங்களம், தமிழ் அல்லது ஆங்கிலம்) பதிலளிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டது.

News

10 வருடங்களில் பொலிஸ் சேவையில் இருந்து 2847 பேர் இடைநிறுத்தம்!

ந.லோகதயாளன் கடந்த 10 ஆண்டுகளில்  பொலிஸ் திணைக்களத்தில் இருந்து 2847 பேர் பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் திணைக்களத்தின் தலைமையகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவல்…

By In
News

போதையில் மூழ்கும் சமூகம்;  அதிர்ச்சி தரும் புள்ளிவிபரங்கள்

2023ஆம் ஆண்டு மாத்திரம் 162,088 பேர் கைது! மொஹமட் ஆஷிக் போதைப்பொருள் விவகாரம் இலங்கையில் மட்டுமன்றி அனைத்து நாடுகளிலும் பாரிய நெருக்கடியாக உள்ளது. எமது நாட்டில், அதை…

By In
News

பூமியை நான்கு தடவைகள் சுற்றிவரும் அளவிற்கு இலங்கையை வானில் சுற்றியுள்ள மஹிந்த ராஜபக்ஷ

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி விமானப்படைத் தலைமையகத்திலிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம்…

By In
News

ஜனாதிபதி அலுவலகத்தின் சொகுசு வாகனங்கள் ஏலத்திற்கு முன்னர் பகிர்ந்தளிக்கப்பட்ட விதம்!

● கோட்டாபயவின் பிரத்தியேக பணியாளர்களுக்கு 11 வாகனங்கள் ● ரணிலின் பிரத்தியேக பணிக்குழாமிற்கு 68 வாகனங்கள் ஜனக சுரங்க வாகனங்களை பொதுவாக காட்சியறைகளில் வைத்தே பொதுமக்களுக்கு காட்சிப்படுத்துவர்….

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *