தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி ஊவா மாகாண ஊடகவியலாளர்களுக்கான அறிவூட்டல் செய்யும் செயலமர்வு 18 ஆம் திகதி பண்டாரவலை மலிந்தி இன் ஹோட்டலில் நடைபெற்றது.
பதுளை மற்றும் பண்டாவலை பிரதேசங்களைச் சேர்ந்த தமிழ் மற்றும் சிங்கள மொழி மூல ஊடகவியலாளர்கள் 45 பேர் அளவில் இந்த செயலமர்வில் பங்குபற்றினர்.
2017 பெப்ரவாரி மாதம் 04 ஆம் திகதி நடைமுறைக்கு வந்த தகவல் அறிவதற்கான சட்டத்தை பயன்படுத்தி செய்திகள் மற்றும் கட்டுரைகளை எழுதுவது தொடர்பாக இங்கு கலந்துரையாடப்பட்டது.
இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் ஏற்பாடு செய்திருந்த இந்த பயிற்சி கருத்தரங்கில் தகவல் அறிவதற்கான உரிமை சட்டம் தொடர்பாக பிரதேச ஊடகவியலாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் உட்பட பல விடயங்கள் பற்றிய கலந்துரையாடப்பட்டன.
கொழும்பு, கண்டி, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களில் நடைபெற்றது போன்று மிகவும் வெற்றிகரமாக நடைபெற்ற ஒரு செயலமர்வாக இது அமைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய இழுவை மடி படகுகளால் பாதிக்கப்படும் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம்
க.பிரசன்னா பல தசாப்தங்கள் நீடிக்கும் இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினையானது, இலங்கை – இந்திய இராஜதந்திர உறவுகளில் அவ்வப்போது நெருக்கடிகளைத் தோற்றுவித்து வருகின்றது. மீனவர்களின் பிரச்சினையை…
2022 கலவரம்: பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான இழப்பீடுகளுக்கு 50 மில்லியன் ரூபா மேலதிக நிதி விடுவிப்பு?
க.பிரசன்னா உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியதும் இலங்கையில் ஆட்சி மாற்றத்துக்கு வழி வகுத்ததுமான காலி முகத்திடல் (அரகலய) போராட்டம் இடம்பெற்று இரண்டு வருடங்கள் கடந்துள்ள போதும், அதனைச் சுற்றிய…
10 வருடங்களில் பொலிஸ் சேவையில் இருந்து 2847 பேர் இடைநிறுத்தம்!
ந.லோகதயாளன் கடந்த 10 ஆண்டுகளில் பொலிஸ் திணைக்களத்தில் இருந்து 2847 பேர் பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் திணைக்களத்தின் தலைமையகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவல்…
போதையில் மூழ்கும் சமூகம்; அதிர்ச்சி தரும் புள்ளிவிபரங்கள்
2023ஆம் ஆண்டு மாத்திரம் 162,088 பேர் கைது! மொஹமட் ஆஷிக் போதைப்பொருள் விவகாரம் இலங்கையில் மட்டுமன்றி அனைத்து நாடுகளிலும் பாரிய நெருக்கடியாக உள்ளது. எமது நாட்டில், அதை…
Recent Comments