News

உணவட்டுன கலிடோ கடற்கரை தொடர்பாக தகவல் கோரியதற்கு தகவல் பெறுவதற்கான உரிமைச் சட்டத்தை மறுக்கும் அதிகாரி

By In

பொதுமக்கள் ஆர்வம் காட்டும் விடயங்கள் தொடர்பாக தகவல்களை பெறுவதற்கான வசதியை தகவல் பெறுவதற்காக அண்மையில் நிறைவேற்றப்பட்டுள்ள உரிமைச் சட்டம் வழங்குகின்றது. அன்றாட வாழ்க்கையில் மக்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் விடயங்கள் தொடர்பாக தகவல்களை அறிவது தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வொன்று அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனாலும் சில தகவல் அதிகாரிகளுக்கு இந்த சட்டம் தொடர்பான அறிவு குறைபாடாக காணப்படுகின்றது. பல்கலைக்கழக மாணவியான சந்தமாலிக்கு கலுத்தறையில் அமைந்துள்ள கலிடோ கடற்கரை பற்றிய சில தகவல்களை அவரது பல்கலைக்கழக ஆய்வூ நடவடிக்கை ஒன்றுக்காக பெற வேண்டிய தேவை ஏற்பட்டது. அதற்காக அவர் எழுத்து மூலமான வேண்டுகோள் ஒன்றை விடுத்தார். பின்னர் அது தொடர்பாக தொலைபேசி மூலமும் வினவினார். ஆனாலும் தகவல் மறுக்கப்பட்டது.
நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் அமெரிக்க உதவித்திட்டத்துடன் (USAID) இணைந்து தகவல் அறிவதற்கான சட்டம் பற்றி நடத்திய பயிற்சி செயலமர்வில் பங்குபற்றிய சந்தமாலி தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டத்தின் மூலம் இவ்வாறான தகவல்களைப் பெற முடியும் என்ற விடயத்தை அறிந்துகொண்டார். அதனால் அவருக்கு அவரது ஆய்வு நடவடிக்கைக்கு தேவையான தகவல்களை பெற தகவல் சட்டம் மூலமான விண்ணப்பத்தை சமர்ப்பித்தால் இலகுவாக அமையும் என்று கருதினார். அதற்கமைய கலுத்தறை பிரதேச செயலகத்தில் கடமையாற்றுகின்ற தகவல் அதிகாரியிடம் தகவல் பெறுவதற்கான விண்ணப்பப் பபடிவம் மூலம் தேவையான தகவல்களை கோரினார்.
ஆனாலும் ஆச்சரியப்படத்தக்க பதில் வழங்கப்பட்டது. உங்களால் வினா அடிப்படையில் கோரப்பட்ட தகவல்களை எங்களால் வழங்க முடியாது. தகவல் கோரியவருக்கான முழுமையான பதிலாக இந்த பதில் அமைந்திருந்தது.
அத்துடன் தகவல் கோரிய மாணவிக்கு மாவட்ட செயலகத்தில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பும் வந்தது. அந்த தொலைபேசி அழைப்பின் மூலம் தகவல் அறிவதற்கான விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கு முன்னர் தகவல் கோரியவர் யார் என்ற விடயம் கேட்கப்பட்டது.
சந்தமாலி அவரது தகவல் அறிவதற்கான விண்ணப்பப் படிவத்தில் அனைத்தையும் தெளிவாக குறிப்பிட்டு கோரிக்கை விடுத்திருந்தார். ஆனாலும் அவரால் புரிந்துகொள்ள முடிந்த ஒரு விடயம் தான் பிரதேச செயலகத்தில் உள்ள தகவல் அதிகாரிக்கு தகவல் பெறுவதற்கான சட்டம் பற்றிய போதுமான அறிவு இல்லை என்ற விடயம்.
அத்துடன் தகவல் அறிவதற்கான சட்டத்தின் அடிப்படையில் தகவல் அதிகாரி பதிலளிப்பதற்கு உடன்பட்டிருந்தாலும் வழங்கியிருந்த பதிலானது அதற்கு ஏற்ப இருக்கவில்லை. அதே நேரம் சந்தமாலியினது பெற்றோரின் வற்புறுத்தலுக்கமைய அவரால் அந்த தகவல் கோரும் நடவடிக்கையை முன்னெடுக்க விரும்பவில்லை. அதே நேரம் இந்த சட்டத்தின் அடிப்படையில் உரிய அதிகாரிகள் போதுமான கரிசணை காட்டாமை தொடர்பாக சந்தமாலி கவலை தெரிவிக்கின்றார். ஆனாலும் இந்த அறிவை எதிர்காலத்தில் அவரது நண்பர்களின் தேவைகளுக்கு பயன்படுத்தும் வகையில் உதவி செய்வதாகவும் அவர் உறுதியளிக்கின்றார்.
இந்த தகவலானது நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம், அமெரிக்க உதவித்திட்டத்துடன் (USAID) இணைந்து தகவல் மற்றும் தொடர்பாடல் பற்றி நடத்திய பயிற்சி செயலமர்வில் பங்கு பற்றியவர்களால் சமர்ப்பிக்கப்பட்டதாகும்.

“இந்த இடுகையின் உள்ளடக்கங்கள் SLPIஇன் முழுப் பொறுப்பாகும், மேலும் USAID அல்லது ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தின் கருத்துக்களை அவசியமாக பிரதிபலிக்கவில்லை.”

News

ஊழியர்களின் நலனுக்காக இடமாற்றப்படும் நோர்வூட் பிரதேச செயலகம்

க.பிரசன்னா நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச செயலகங்களின் எண்ணிக்கையை 12 ஆக அதிகரிக்க வேண்டுமென கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக 10 பிரதேச செயலகங்களை உருவாக்குவதற்கான…

By In
News

தேர்தல் சட்டத்தை மீறிய அரச அலுவலர்களுக்கு தண்டனையில்லையா?

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி இலங்கை ஜனநாயக பாரம்பரியத்தின் நீண்டகால வரலாற்றை கொண்டுள்ள நாடாகும். சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் ஜனநாயக ஆட்சி முறையின் அடித்தளமாகும். அதனைப் பாதுகாப்பதற்கும்,…

By In
News

இலங்கையில் பிறப்புகள் குறைவடைவதற்கும் இறப்புகள் அதிகரிப்பதற்கும் பின்னணியிலுள்ள இரகசியம் என்ன?

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் வெளிக் கொணரப்பட்ட தரவுகள் முகமது ஆசிக் குடித்தொகை வளர்ச்சி பற்றிய தகவல் மற்றும் தரவுகளை குடித்தொகை மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பில்…

By In
News

அம்பலாந்தோட்டையில் மணல் கொள்ளைக்கு பின்னால் இருப்பது யார்?

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி இன்று அதிகம் பேசப்படும் விடயம் இலஞ்சம், ஊழல், வீண்விரயம் இல்லாத நாட்டை உருவாக்குவது என்பதாகும். மக்களும் தற்போதைய அரசாங்கமும் அதற்கு இணங்கிச் சென்றுள்ளனர்….

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *