News

ஆறு வருடங்களில் 142 சிறுவர்கள், 499 பெண்கள் கொலை! 7758 சிறுவர்கள் மீதும் 14,023 பெண்கள் மீதும் பாலியல் துஷ்பிரயோகங்கள்

By In

க.பிரசன்னா

நாட்டில் 2016 – 2021 ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் சிறுவர்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் 31,810 முறைப்பாடுகளும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் 45,404 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோக தடுப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் இலங்கை பொலிஸ் தலைமையகத்தின் கீழ் இயங்கும் பெண்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோக தடுப்பு பணியகத்திடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களிலேயே இந்த புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. 

நாட்டில் 2016 – 2021 ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் சிறுவர்களுக்கு எதிராக 31,810 குற்றச்சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 142 சிறுவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதுடன் 56 சிறுவர்களுக்கு எதிராக கொலை முயற்சிகள் பதிவாகியுள்ளன. 228 சிறுவர்களுக்கு கடுங்காயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் 7758 சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் 4471 சிறுவர்கள் தமது நெருங்கிய உறவினர்களினாலேயே துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை நாட்டில் 2016 – 2021 ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் பெண்களுக்கு எதிராக 45,404 வன்முறைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 499 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளதுடன் 81 பெண்கள் மீது கொலை முயற்சிகள் இடம்பெற்றுள்ளன.

1401 பெண்களுக்கு கடுங்காயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் 14,023 பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பெண்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோக தடுப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

News

EPF நிதியம் 400 டிரில்லியனை அடைந்ததுடன், ETF நிதியம் 400 பில்லியனை எட்டியது: அவை உறுப்பினர்களுக்கு பயனளிக்காமல் விரிவுபடுத்தப்பட வேண்டுமா?

சமீபத்திய தேர்தல் பிரச்சாரங்களும் மே தின நிகழ்வுகளும் இலங்கையின் தொழிலாளர் படையை முறையாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் நிலைத்தன்மையான  சமூகப் பாதுகாப்பு முறைமையின் அவசியத்தை எடுத்துக்காட்டுவதுடன் உறுதிப்படுத்துகின்றன. 1958…

By In
News

மாத்தறை பொது வைத்தியசாலையின் மருத்துவக் கழிவு விவகாரம்: விசாரணைக்கு அளிக்கப்பட்ட பதில்கள் பொய்யானவை!

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி உலகெங்கிலும் மருத்துவக் கழிவுகளை அகற்றுவது மிகவும் அவதானமாக மேற்கொள்ளப்படும் ஒரு செயற்பாடாகும். 22 மில்லியன் குடிமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையின் சுகாதார…

By In
News

அரச நிதி இப்படியும் வீணடிப்பு: 4 முன்னாள் ஜனாதிபதிகளுக்கு 397 தனிப்பட்ட பணியாளர்கள்!

க.பிரசன்னா முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் தொடர்பில் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டுவரும் கருத்துக்கள் அவர்களின் சிறப்புரிமைகளுக்கு அரச நிதி அதிகளவு விரயம் செய்யப்படுவதை வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில், முன்னாள் பிரதமர்கள் மற்றும்…

By In
News

ஜீவன சக்தி காப்புறுதி திட்டம் மூலம் ஏமாற்றப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள்

க. பிரசன்னா பெருந்தோட்டத் தொழிலாளர்களின் காணி உரிமை, தனி வீடு மற்றும் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் காலங்காலமாக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளமை…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *