News

அரச வைத்தியசாலையில் சேரிக்கப்படும் குருதி  தனியார் வைத்தியசாலைகளுக்கும் வழங்கப்படுகிறது

By In

ந.லோகதயாளன்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு தானமாக கிடைக்கும் குருதியில் ஒரு பகுதி தனியார் வைத்தியசாலைகளுக்கும் வழங்கப்படுவது தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ளது. 

யாழ். குடாநாட்டில் 17 தனியார் வைத்தியசாலைகள் இயங்கும் நிலையில் இதில் 8 வைத்தியசாலைகளில் சத்திர சிகிச்சைக் கூடங்களும் உள்ளன. அந்த தனியார் சத்திர சிகிச்சை நிலையங்களில் இடம்பெறும் சத்திர சிகிச்சைகளின்போது தேவைப்படும் குருதி அரச வைத்தியசாலைகளின் இரத்த வங்கியில் இருந்தே செல்கின்றது. 

மத்திய சுகாதார அமைச்சின் அனுமதிக்கு அமைவாகவே இவ்வாறு அரச வைத்தியசாலைகளில் சேரிக்கப்படும் குருதி தனியார் வைத்தியசாலைகளுக்கும் வழங்கப்படுவதாக தெரிய வருகிறது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தியினால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய, 2022 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு 8596 பைந்து குருதி கிடைத்துள்ளது. இதில் 807 பைந்து குருதி தனியார் வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று 2023 ஆம் ஆண்டு 9043 பைந்து குருதி இரத்த வங்கிக்கு கிடைத்துள்ளது. இதில் 875 பைந்து குருதி தனியார் வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டின் யூன் மாதம் 30 ஆம் திகதி வரையான அரையாண்டு காலப்பகுதியில் 4113 பைந்து குருதி வைத்தியசாலைக்கு கிடைத்துள்ள நிலையில் இதிலிருந்து 441 பைந்து குருதி தனியார் வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.   

2022, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டின் யூன் வரையான காலப்பகுதியில் மொத்தமாக 2 ஆயிரத்து 23 பைந்து குருதி தனியார் வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் 1507 பைந்து குருதி ஒரு தனியார்  வைத்தியசாலைக்கு மாத்திரம் வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று மேலும் 209 பைந்து குருதி மற்றுமொரு தனியார் வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டுள்ளமையும் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கண்டறியப்பட்டுள்ளது.

News

EPF நிதியம் 400 டிரில்லியனை அடைந்ததுடன், ETF நிதியம் 400 பில்லியனை எட்டியது: அவை உறுப்பினர்களுக்கு பயனளிக்காமல் விரிவுபடுத்தப்பட வேண்டுமா?

சமீபத்திய தேர்தல் பிரச்சாரங்களும் மே தின நிகழ்வுகளும் இலங்கையின் தொழிலாளர் படையை முறையாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் நிலைத்தன்மையான  சமூகப் பாதுகாப்பு முறைமையின் அவசியத்தை எடுத்துக்காட்டுவதுடன் உறுதிப்படுத்துகின்றன. 1958…

By In
News

மாத்தறை பொது வைத்தியசாலையின் மருத்துவக் கழிவு விவகாரம்: விசாரணைக்கு அளிக்கப்பட்ட பதில்கள் பொய்யானவை!

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி உலகெங்கிலும் மருத்துவக் கழிவுகளை அகற்றுவது மிகவும் அவதானமாக மேற்கொள்ளப்படும் ஒரு செயற்பாடாகும். 22 மில்லியன் குடிமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையின் சுகாதார…

By In
News

அரச நிதி இப்படியும் வீணடிப்பு: 4 முன்னாள் ஜனாதிபதிகளுக்கு 397 தனிப்பட்ட பணியாளர்கள்!

க.பிரசன்னா முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் தொடர்பில் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டுவரும் கருத்துக்கள் அவர்களின் சிறப்புரிமைகளுக்கு அரச நிதி அதிகளவு விரயம் செய்யப்படுவதை வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில், முன்னாள் பிரதமர்கள் மற்றும்…

By In
News

ஜீவன சக்தி காப்புறுதி திட்டம் மூலம் ஏமாற்றப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள்

க. பிரசன்னா பெருந்தோட்டத் தொழிலாளர்களின் காணி உரிமை, தனி வீடு மற்றும் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் காலங்காலமாக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளமை…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *