களனி பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான விடுதி வசதி தொடர்பாக பின்வரும் தகவல்களை வழங்குமாறு கோரி தகவல் அறிவதற்கான சட்டத்தின் கீழ் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது.
• மூன்றாம் வருட மாணவிகளுக்கான விடுதி வசதிகள் வழங்குவதற்கு மாணவிகளது எண்ணிக்கைக்கு ஏற்ப இட வசதி போதுமானதாக இருக்கின்றதா?
• மாணவிகளது விடுதிக்கான பாதுகாப்பு திருப்திகரமானதாக இருக்கின்றதா?
• சில ஹோட்டல்களில் விடுதி வசதிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிரு க்கின்றதா?
• அடுத்த வருத்திற்கு என்ன அடிப்படையில் மாணவர்களுக்கு விடுதி வசதிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன?
• கடந்த வருடம் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட்ட விடுதிகள் எவை?
• மாணவர்களுக்கு திருப்திகரமான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதா?
• விடுதிகளுக்கு மேலதிகமாக மாணவர்களை அனுமதிப்பதில் நெருக்கடிகள் உள்ளனவா?
தகவல் அறிவதற்கான விண்ணப்பத்தில் இந்த தகவல்கள் எதற்காக கேட்கப்படுகின்றது என்ற காரணம் குறிப்பிடப் படவில்லை என்பதால் உரிய தகவல்களை வழங்க முடியாது என்று களனி பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்திருந்தது.
அத்துடன் அப் பல்கலைக்கழத்தின் பதிவாளரை சந்தித்து விண்ணப்பம் சமர்ப்பித்த மாணவரின் அiளாயத்தை உறுதிப்படுத்துமாறும் கோரப்பட்டிருந்தது.
தகவல் அறிவதற்கான சட்டத்தில் தகவல் கோரும் போது அவ்வாறு தகவல் கோருவதற்கான காரணம் என்ன என்ற விடயம் மற்றும் தகவல் கோருபவரின் அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்ற நடைமுறை எதுவும் இல்லை.
இந்த தகவல் நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம், அமெரிக்க உதவித்திட்டத்துடன் இணைந்து தகவல் மற்றும் தொடர்பாடல் தகவல் அறிவதற்கான சட்டம் பற்றி நடத்திய பயிற்சி செயலமர்வில் பங்குபற்றிய இளைஞர் குழுவால் முன்வைக்கப்பட்டதாகும்.
EPF நிதியம் 400 டிரில்லியனை அடைந்ததுடன், ETF நிதியம் 400 பில்லியனை எட்டியது: அவை உறுப்பினர்களுக்கு பயனளிக்காமல் விரிவுபடுத்தப்பட வேண்டுமா?
சமீபத்திய தேர்தல் பிரச்சாரங்களும் மே தின நிகழ்வுகளும் இலங்கையின் தொழிலாளர் படையை முறையாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் நிலைத்தன்மையான சமூகப் பாதுகாப்பு முறைமையின் அவசியத்தை எடுத்துக்காட்டுவதுடன் உறுதிப்படுத்துகின்றன. 1958…
மாத்தறை பொது வைத்தியசாலையின் மருத்துவக் கழிவு விவகாரம்: விசாரணைக்கு அளிக்கப்பட்ட பதில்கள் பொய்யானவை!
ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி உலகெங்கிலும் மருத்துவக் கழிவுகளை அகற்றுவது மிகவும் அவதானமாக மேற்கொள்ளப்படும் ஒரு செயற்பாடாகும். 22 மில்லியன் குடிமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையின் சுகாதார…
அரச நிதி இப்படியும் வீணடிப்பு: 4 முன்னாள் ஜனாதிபதிகளுக்கு 397 தனிப்பட்ட பணியாளர்கள்!
க.பிரசன்னா முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் தொடர்பில் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டுவரும் கருத்துக்கள் அவர்களின் சிறப்புரிமைகளுக்கு அரச நிதி அதிகளவு விரயம் செய்யப்படுவதை வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில், முன்னாள் பிரதமர்கள் மற்றும்…
ஜீவன சக்தி காப்புறுதி திட்டம் மூலம் ஏமாற்றப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள்
க. பிரசன்னா பெருந்தோட்டத் தொழிலாளர்களின் காணி உரிமை, தனி வீடு மற்றும் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் காலங்காலமாக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளமை…
Recent Comments