களனி பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான விடுதி வசதி தொடர்பாக பின்வரும் தகவல்களை வழங்குமாறு கோரி தகவல் அறிவதற்கான சட்டத்தின் கீழ் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது.
• மூன்றாம் வருட மாணவிகளுக்கான விடுதி வசதிகள் வழங்குவதற்கு மாணவிகளது எண்ணிக்கைக்கு ஏற்ப இட வசதி போதுமானதாக இருக்கின்றதா?
• மாணவிகளது விடுதிக்கான பாதுகாப்பு திருப்திகரமானதாக இருக்கின்றதா?
• சில ஹோட்டல்களில் விடுதி வசதிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிரு க்கின்றதா?
• அடுத்த வருத்திற்கு என்ன அடிப்படையில் மாணவர்களுக்கு விடுதி வசதிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன?
• கடந்த வருடம் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட்ட விடுதிகள் எவை?
• மாணவர்களுக்கு திருப்திகரமான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதா?
• விடுதிகளுக்கு மேலதிகமாக மாணவர்களை அனுமதிப்பதில் நெருக்கடிகள் உள்ளனவா?
தகவல் அறிவதற்கான விண்ணப்பத்தில் இந்த தகவல்கள் எதற்காக கேட்கப்படுகின்றது என்ற காரணம் குறிப்பிடப் படவில்லை என்பதால் உரிய தகவல்களை வழங்க முடியாது என்று களனி பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்திருந்தது.
அத்துடன் அப் பல்கலைக்கழத்தின் பதிவாளரை சந்தித்து விண்ணப்பம் சமர்ப்பித்த மாணவரின் அiளாயத்தை உறுதிப்படுத்துமாறும் கோரப்பட்டிருந்தது.
தகவல் அறிவதற்கான சட்டத்தில் தகவல் கோரும் போது அவ்வாறு தகவல் கோருவதற்கான காரணம் என்ன என்ற விடயம் மற்றும் தகவல் கோருபவரின் அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்ற நடைமுறை எதுவும் இல்லை.
இந்த தகவல் நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம், அமெரிக்க உதவித்திட்டத்துடன் இணைந்து தகவல் மற்றும் தொடர்பாடல் தகவல் அறிவதற்கான சட்டம் பற்றி நடத்திய பயிற்சி செயலமர்வில் பங்குபற்றிய இளைஞர் குழுவால் முன்வைக்கப்பட்டதாகும்.
இந்திய இழுவை மடி படகுகளால் பாதிக்கப்படும் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம்
க.பிரசன்னா பல தசாப்தங்கள் நீடிக்கும் இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினையானது, இலங்கை – இந்திய இராஜதந்திர உறவுகளில் அவ்வப்போது நெருக்கடிகளைத் தோற்றுவித்து வருகின்றது. மீனவர்களின் பிரச்சினையை…
2022 கலவரம்: பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான இழப்பீடுகளுக்கு 50 மில்லியன் ரூபா மேலதிக நிதி விடுவிப்பு?
க.பிரசன்னா உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியதும் இலங்கையில் ஆட்சி மாற்றத்துக்கு வழி வகுத்ததுமான காலி முகத்திடல் (அரகலய) போராட்டம் இடம்பெற்று இரண்டு வருடங்கள் கடந்துள்ள போதும், அதனைச் சுற்றிய…
10 வருடங்களில் பொலிஸ் சேவையில் இருந்து 2847 பேர் இடைநிறுத்தம்!
ந.லோகதயாளன் கடந்த 10 ஆண்டுகளில் பொலிஸ் திணைக்களத்தில் இருந்து 2847 பேர் பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் திணைக்களத்தின் தலைமையகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவல்…
போதையில் மூழ்கும் சமூகம்; அதிர்ச்சி தரும் புள்ளிவிபரங்கள்
2023ஆம் ஆண்டு மாத்திரம் 162,088 பேர் கைது! மொஹமட் ஆஷிக் போதைப்பொருள் விவகாரம் இலங்கையில் மட்டுமன்றி அனைத்து நாடுகளிலும் பாரிய நெருக்கடியாக உள்ளது. எமது நாட்டில், அதை…
Recent Comments