News

அநீதிகளை தடுக்க தேசிய மொழிக் கொள்கை ஒன்றின் அவசியம்

By In

2018 ஆம் ஆண்டு அரசாங்க வர்த்தமாணி அறிவித்தல் மூலம் விண்ணப்பம் கோரப்பட்டிருந்த சுகாதார மற்றும் போசாக்கு அலுவலருக்கான பதவிக்காக பதுளையைச் சேர்ந்த நபர் ஒருவர் விண்ணப்பித்திருந்தார்.
ஆனாலும் அரசாங்க வர்த்தமாணி அறிவித்துலுக்கமைய அல்லது அரசாங்கத்தின் வேலை வழங்கும் விதிமுறைகளுக்கமைய பதுளை மாவட்ட சுகாதார திணைக்களத்தில் இருந்து அவரது பரீட்சை தொடர்பான எந்தவிதமான பதிலையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை.
இதே காலப்பகுதியில் அவர் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் அமெரிக்க உதவித் திட்டத்துடன் இணைந்து நடத்திய தகவல் அறிவதற்கான சட்டம் பற்றி பயிற்சி செயலமர்வில் பங்குபற்றியதோடு அதுபற்றியும் அறிந்து கெண்டார்.
அந்த அறிவைக் கொண்டு பதுளை மாவட்ட சுகாதாரத் திணைண்களத்திற்கு தகவல் அறிவதற்கான விண்ணப்பப் படிவம் ஒன்றை சமர்ப்பித்து அவரது பரீட்சையின் முடிவு மற்றும் அரசாங்க துறையில் தொழில் வழங்கும் நடைமுறை தொடர்பான விதிமுறைகள் பற்றியும் கேள்வி எழுப்பினார். தகவல் சட்ட செயலமர்வில் பெற்றுக் கொண்ட அறிவுக்கமைய அவரது விண்ணப்பத்தில் பின்வருமாறு சில வினாக்களையும் அவர் கேட்டிருந்தார்.
2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அவர் தகவல் அறிவதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்து இருந்ததோடு 05 மாதங்கள் அதற்கு கடந்துவிட்டன.
• பரீட்சை குறிப்பிட்ட ஒரு தினத்தில் நடத்தப்பட்டதா?
• முன்னைய விண்ணப்பங்கள் தொடர்பாக கடந்த வருடம் ஏதாவது தகவல்கள் பிரசுரிக்கப்பட்டதா?
• இல்லையெனில் அவ்வாறு தகவல் வெளிப்படுத்தப் படாததற்கான காரணம் என்ன?
அவரை வியப்படையச் செய்யும் வகையில் அவரது இந்த விண்ணப்பத்திற்கான பதில் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அந்த பதிலில் அவரால் கோரப்பட்ட தகவல்கள் இருக்கின்றன. ஆனாலும் அவர் தகவலுக்கான விண்ணப்பத்தில் கோரியபடி அந்த தகவல்களை தமிழில் வழங்க முடியவில்லை என்பதோடு விண்ணப்பமும் பூரணப்படுத்தப்பட்டதாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனாலும் தகவல் அறிவதற்கான சட்டத்தின் அடிப்படையில் தகவல் கோரப்பட்டுள்ள மொழியை அதற்கான அதிகாரி புரிந்துகொள்ள முடியாது என்று தொவிப்பதற்கு உரிமை இல்லை. தகவல் வழங்கக் கூடிய அதிகாரி நாட்டில் தேசிய அரசகரும மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியில் அவர் கோரிய தகவல்களை வழங்க மறுக்கின்றமை தொடர்பாக அதிருப்தியை தெரிவிக்கின்றார்.
அது தொடர்பாக இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் அதிகாரி விண்ணப்பதரியுடன் உரையாடிய போது இது பற்றி அவர் மேன்முறையீடு செய்ய திட்டமிடுவதாக கூறினார்.
அரசாங்கம் அதன் அலுவலகங்களில் தமிழ் மொழியில் கருமமாற்றக் கூடிய தமிழ் மொழி தெரிந்த அதிகாரிகளை நியமிக்க தவறியதன் விளைவே விண்ணப்பதாரிக்கு ஏற்பட்டுள்ள ஏமாற்றத்திற்கு காரணமாகும். இது ஒரு துரதிஷ்டமான விடயமாகும்.
அத்துடன் விண்ணப்பதாரியின் அடுத்த இலக்கு தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டத்தின் மூலம் தமிழ் மொழி அமுலாக்கலில் கடைபிடிக்க வேண்டிய சட்டம் மீறப்பட்டுள்ளது என்பதாகும். எல்லா அலுவலகங்களிலும் அரச கரும மொழிகளான சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளுக்கு உரிய அந்தஸ்தை வழங்கும் வகையில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருப்பது அவசியாமனதாகும்.
விண்ணப்பதாரியின் அடுத்த விண்ணப்பப் படிவத்தில் தகவல் அதிகாரிகளாக பயிற்றுவிக்கப் பட்டிருப்பவர்களில் எத்தனை அதிகாரிகள் தமிழ் மொழி பேசக்கூடியவர்கள் என்றும் அதற்காக அரசாங்க மட்டத்தில் மொழி ரீதியான பயிற்சியளிப்பதற்காக எத்தனை பயிற்சி செயலமர்வுகள் நடத்தப்பட்டுள்ளது என்பதுமாகும்.
சிக்கலான விடயங்கள் தொடர்பாக புரிந்துகொண்டு அது தொடர்பாக நிர்வாகத்துறை மற்றும் அரச சேவை அதிகாரிகளை கேள்வி எழுப்பி மக்களுக்கு சேவை செய்யும் மற்றும் மக்களுக்கான அநீதிகளை நிவர்த்தி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க தகவல் சட்டம் நம்பிக்கையை வழங்குவதாக விண்ணப்பதாரி தெரிவிக்கின்றார்.
இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் அமெரிக்க உதவித் திட்டத்துடன் இணைந்து தகவல் அறிவதற்கான சட்டம் பற்றி பயிற்சி செயலமர்வொன்றை நடத்தியது. அந்த செயலமர்வில் பங்குபற்றிய அப்பிரதேசத்தைச் சேர்ந்த குழுவொன்று தகவல் அறிவதற்கான உரிமை சட்டம் பற்றி அறிந்து அதன் ஊடாக கோரி தகவல் பற்றியதாக சமர்ப்பிக்கப்பட்ட விடயம் இதுவாகும்.

News

20 அரச நிறுவனங்களின் மூலம் அரசாங்கத்துக்கு 85 ஆயிரம் கோடி ரூபா இழப்பு!

க.பிரசன்னா நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக இலங்கை தற்போது சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனை பெற்றுக்கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. மறுபுறம் அரசுக்கு அதிக செலவை…

By In
News

2025 மார்ச் முதல்முழுமையாக அமுலுக்கு வரும் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம்

ஜனக சுரங்க தனிப்பட்ட தரவின் செயலாக்கத்தை ஒழுங்குபடுத்துதல், தனிப்பட்ட தரவைப் பாதுகாத்தல், தரவு பங்களிப்பாளர்களின் உரிமைகளை அடையாளம் கண்டு வலுப்படுத்துதல் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு, இலங்கை பிரஜைகளுக்கு…

By In
News

ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதை உறுதிப்படுத்தும் பாராளுமன்ற தரவுகள்!

தனுஷ்கசில்வா ஊடகவியலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களின் ஒரு தசாப்தகால வரலாற்றை இலங்கை நாடாளுமன்றம் அம்பலப்படுத்தியுள்ளது. 2006 மற்றும் 2015ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ஊடகவியலாளர்கள் மற்றும் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் அபாயகரமான…

By In
News

எல்லைகள் வரையறுக்கப்படாது தனியார் பல்கலைக்கழகத்துக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள கீரிமலை ஜனாதிபதி மாளிகை!

ந.லோகதயாளன் கீரிமலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமைத்த ஜனாதிபதி மாளிகையும் அதனைச் சூழவுள்ள பிரதேசமும் ஆண்டொன்றிற்கு 10 ஆயிரம் டொலர்களுக்கு தனியார் பல்கலைக் கழகத்திற்கு குத்தகைக்கு…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *