News, Uncategorized

RTI நடவடிக்கை: நுவரெலியா கொடேலொஜ் தோட்ட போக்குவரத்து பிரச்சினை

By In

நுவரெலியா மாவட்டத்தில் 1000 குடும்பங்கள் அளவில் வசிக்கக் கூடிய ஒரு பிரதேசமே கொடேலொஜ் தோட்டமாகும். உடுபுசல்லாவையில் அமைந்துள்ள இந்த தோட்டம் நுவரெலியா நகரத்தில் இருந்து 05 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கின்றது. இந்த தோட்டம் ஒரு அழகான பிரதேசமாக காணப்பட்டாலும் போதுமான போக்குவரத்து வசதி இன்மை பாரிய பிரச்சினையாக இருந்து வருகின்றது.
கொடேலொஜ் தோட்டத்திற்கு ஒழுங்கான பாதை இல்லாததால் பயணிப்பதற்கு உரிய போக்குவரத்து வசதி இல்லை. இங்கு குடியிருக்கும் மக்கள், பாடசாலை மாணவர்கள் தினமும் காலையில் கல்வி, தொழில் என்று இதர தேவைகளுக்கும் நுவரெலியாவுக்கும் ஏனைய பகுதிகளுக்கும் போக வேண்டி இருக்கின்றது. ஆனாலும் அதற்கான போக்குவரத்து வசதி இல்லை. இது அவர்களை பெரும் கஷ்டத்திற்குள்ளாக்கி இருக்கின்றது. இப்பகுதிக்காக சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பொதுப் போக்குவரத்து பஸ் சேவை இரண்டு வருடங்களுக்கு முன்னர் 2016 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது.
இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் அமெரிக்க உதவித் திட்டத்துடன் (USAID-SDGAP) இணைந்து தகவல் அறிவதற்கான சட்டம் பற்றி பயிற்சி செயலமர்வொன்றை நடத்தியது. அந்த செயலமர்வில் பங்குபற்றிய அப்பிரதேசத்தைச் சேர்ந்த குழுவொன்று தகவல் அறிவதற்கான உரிமை சட்டம் பற்றி அறிந்து கொண்டவுடன் அந்த சட்டத்தை பன்படுத்தி வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் தோட்டத்திற்கான பாதையை திருத்தி அமைக்கப்படாமை மற்றும் பஸ் சேவை நிறுத்தம் தொடர்பாக 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தகவல் அறிவதற்கான விண்ணப்பப்படிவம் ஒன்றை சமர்ப்பித்து தகவல் கோரினர்.
ஆனாலும் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்திற்கு பதில் கிடைக்கவில்லை. இது தொடர்பாக இளைஞர் குழு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரி ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வினவினர். பஸ் சேவை மிக விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று அவர்கள் உறுதியளித்தனர். இருந்தாலும் தகவல் சட்டத்தில் கூறியுள்ளபடி உரிய முறையில் பதில் வழங்கப்படவில்லை. இதனால் குறித்த அதிகார சபையின் அதிகாரிகளுக்கு தகவல் அறிவதற்கான சட்டம் பற்றிய போதுமான அறிவு இல்லை என்று அந்த இளைஞர்கள் கருதுகின்றனர்.
சில மாதங்களின் பின்னர் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தகவலுக்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்தவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு குறிப்பிட்ட விண்ணப்பப் படிவம் உரிய முறையில் சமர்பிக்கப்படவில்லை என்பதை தெரிவித்தனர். பல மாதங்கள் கடந்தும் மேலதிக பதில்கள் வழங்கப்படவில்லை. அதனால் மேலும் விண்ணப்பங்கள் மூலம் தகவல் கோர திட்டமிட்டனர்.
இருந்தாலும் அரசாங்க அதிகாரிகளை கேள்வி எழுப்ப அப்பிரதேச பெற்றோர் தயங்குவதாக அந்த இளைஞர்கள் தெரிவிக்கின்றனர். ஆனாலும் தகவல் சட்டம் அவர்களது பிரச்சினைகள் தொடர்பாக அதிகாரிகளை கேள்வி எழுப்ப ஊக்குவிப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். அதிகாரிகள் தொடர்பாக என்ன அடிப்படையில் கேள்வி எழுப்புவதென்று அவர்களது பெற்றோர்களை அறிவூட்டல் செய்வதாக பயிற்சி நெறியில் பங்குபற்றியவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த தகவலானது நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம், அமெரிக்க உதவித்திட்டத்துடன் (USAID) இணைந்து நடத்திய பயிற்சி செயலமர்வில் பங்குபற்றிய ஒருவரால் சமர்ப்பிக்கப்பட்டதாகும்.

“இந்த இடுகையின் உள்ளடக்கங்கள் SLPIஇன் முழுப் பொறுப்பாகும், மேலும் USAID அல்லது ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தின் கருத்துக்களை அவசியமாக பிரதிபலிக்கவில்லை.”

News

பொருளாதார நெருக்கடியால் தொழில்தேடி வெளிநாடு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ந.லோகதயாளன் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பின்னர் தொழில்வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதை தகவல் அறியும் சட்டத்தின் கீழ்  மாவட்டச் செயலகங்கள் மற்றும் வெளிநாட்டு…

By In
News

நுவரெலியாவில் சட்டவிரோதமான கட்டுமானங்களின் பின்னணியில் அரசியல் அதிகாரமா?

ஆர்.எப்.எம் சுஹேல்- நுவரெலியா உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த வேட்பாளர்கள் உட்பட பலரது வீடுகள் உரிய விதிமுறைகளைப் பேணாது சட்டவிரோதமான முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக…

By In
News

தேசிய பாடசாலை தொடர்பான கட்டுக்கதையும் ஆசிரியர் வெற்றிடங்களும்

மகேந்திர ரந்தெனிய மூன்று வருடங்களாகக் கல்வி சீர்திருத்தக் குழுக்களுக்குப் பல கோடிக்கணக்கில் பணம் செலவழித்தும் எந்தப் பலனும் கிடைக்கப்பெறவில்லை என்பதை ஊடகங்கள் அவ்வப்போது வெளிப்படுத்திவருகின்றதை  காணக்கூடியதாக உள்ளது….

By In
News

தொடரும் இலங்கை – இந்திய மீனவர் கைதுகள்!

க.பிரசன்னா இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினை நீண்ட வரலாற்றைக் கொண்டது. கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்ட பின்னர் ஆரம்பமான பிரச்சினை, இப்போது சட்டவிரோத மீன்பிடி முறையினால் வேறு…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *