யுனெஸ்கோ (UNESCO) அறிவித்த தகவல் அணுகலுக்கான சர்வதேச தினம் (IDUAI) செப்டம்பர் 28 ஆம் தேதி அன்று ஆகும். இந்த நாளின் நினைவாக, இலங்கை பத்திரிகை நிறுவனம் (SLPI) ஒக்டோபர் 1 ஆம் தேதி “தகவலுக்கான உரிமை மற்றும் எழுதல்” என்ற தலைப்பில் ஒரு நிகழ்வை நடத்தியது. இது தகவல் அறியும் உரிமை (RTI) மற்றும் பத்திரிகையியலில் தகவல் அறியும் உரிமையின் பயன்பாடு ஆகியவற்றை மையமாகக் கொண்டது. இந்த நிகழ்வில் 4 பேச்சாளர்கள் அடங்கிய குழு உரையாடல் இடம்பெற்றது. ஊடகவியலாளர்களான இப்பேச்சாளர்கள் அனைவரும் தங்கள் தொழில்களில் தகவல் அறியும் உரிமையுடன் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
குழு உறுப்பினர் தரிந்து ஜெயவர்தன, “வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலுக்காக எழுதுதல்” என்ற தலைப்பில் பேசிய அதே நேரத்தில், சிவலிங்கம் சிவகுமாரன், “பொது அதிகாரங்களில் கொள்கைகள் மற்றும் ஒழுங்குமுறைகளில் தகவல் அறியும் உரிமையின் செல்வாக்கு” குறித்து விவாதித்தார். ராகுல் சமந்த, “ஜனநாயகத்திற்கான பொதுமக்களை மேம்படுத்துதல்” எனும் தலைப்பில் பேசியதுடன், ரிசா விக்ரமதுங்க, “தகவல் அறியும் கொள்கைகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் அடிப்படை” எனும் தலைப்பில் பேசினார். குழுவின் நடுவரான கமல் லியனாராச்சி ஒரு மும்மொழி ஈடுபாட்டை அனுமதிக்கும் வகையில் நிகழ்வை வழிநடத்தினார்; இது பல கலந்துரையாடல்களுக்கு வழிவகுத்தது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்களில் பிரபலமான சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில செய்தித்தாள்களின் பத்திரிகையாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் அடங்கினர். மாலையின் பிற்பகுதியில் பார்வையாளர்களுக்கு, தனிப்பட்ட கேள்விகளை எழுப்புவதன் மூலமும் மேலும் உரையாடலில் ஈடுபடுவதன் மூலமும் குழு உறுப்பினர்களுடன் உரையாட வாய்ப்பு வழங்கப்பட்டது.
SLPI இன் தகவல் அணுகலுக்கான சர்வதேச தின நிகழ்வு இவ்விதத்தில் ஒரு அர்த்தமுள்ள மாலை நேரத்தை கழித்ததுடன் முடிவுக்கு வந்தது.
Recent Comments