இலங்கையில் தற்போது நடைமுறையில் இருந்து வரும் தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டம் தொடர்பான தமிழ் மொழிமூல செயலமர்வு யாழ்ப்பாணம் வாலம்பூரி ஹோட்டலில் 2017 ஆகஸ்ட் 05 ஆம் திகதி நடைபெற்றது.
தகவல் அறிவதற்கான உரிமை மக்களது அடிப்படை உரிமையாக இருந்து வந்தாலும் அதுபற்றிய மக்களின் அறிவு மட்டம் குறைந்தளவிலே இருந்து வருவதால் இந்த சட்டத்தை மக்கள் பயன்படுத்துவதில் குறைபாடு நிலவுகின்றது. இந்த சட்டத்தை நடைமுறைப் படுத்துவதில் அதிகமாக பயன்படுத்த வேண்டிய தேவை இருந்து வருகின்றது. அது தொடர்பாக யாழ் சிவில் சமூகத்தினருக்கு அறிவூட்டப்பட்டது.
Recent Comments