News

அகதிகள் சார் விடயங்களுக்கு பொறுப்புள்ள அரச அதிகாரம் எது?

By In

தகவல் அறியும் விண்ணப்பதாரரின் பொதுவான அனுபவம், கோரப்பட்ட தகவல்கள் எமது எல்லைக்குள் வராது என்று ஒரு பொது அதிகாரியிடமிருந்து ஒரு கடிதத்தைப் பெறுவது.

பல சந்தர்ப்பங்களில், இதுபோன்ற நிகழ்வு ஏற்படின், தகவல் கோரிக்கையாளர் மேலதிக ஆராய்ச்சி செய்து,  தனது குறிப்பிட்ட வினவலுக்கு விடை வழங்குவதற்கு பொறுப்பாகக்கூடிய மற்றொரு பொது அதிகாரத்தைக் கண்டறிவார்.

இருப்பினும், வெவ்வேறு அரசாங்க நிறுவனங்கள் அனைத்தும் கோரப்பட்ட தகவல்களை அதிகாரப்பூர்வமாக வழங்க இயலாது என்று கூறினால் என்ன செய்வது? கோரிக்கையாளர் இதன் பின் என்ன நடவடிக்கை எடுப்பார்?

இலங்கைக்கு வரும் அகதிகள் குறித்து இரண்டு வெவ்வேறு பொது அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். தகவல் அறியும் விண்ணப்பங்கள் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்திற்கும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுக்கும் அனுப்பப்பட்டன. இந்த இரண்டு அரசாங்க அதிகாரங்களும் கோரப்பட்ட தகவல்கள் தங்கள் திணைக்களத்தில் இல்லை என்று அல்லது அது அவர்களின் எல்லைக்குள் வரவில்லை என்று பதிலளித்தன.

தகவல் அறியும் விண்ணப்பத்தில் உள்ள விடயங்களுக்கு அவர்கள் பொறுப்பேற்க முடியாது என்ற அடிப்படையில் தகவல் கோரிக்கையை நிராகரிக்கும் பொது அதிகாரசபை, இதுபோன்ற விடயங்களுக்கு எந்த அரச திணைக்களம் பொறுப்பேற்கும் என்பதைக் குறிப்பிட முயற்சி செய்தால், அது தகவல் கோரும் எவராலும் வரவேற்கப்படும் ஒரு செயலாக அமையும்.

News, Uncategorized

இரத்தினபுரி மாவட்ட ஊடவியலாளர்களுக்கான தகவலறியும் உரிமைச் சட்டம் தொடர்பான பயிற்சிப்பட்டறை  

பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான தகவல் அறியும் உரிமைக் கட்டமைப்பை வலுப்படுத்துதல்: தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) குறித்து ஊடகவியலாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் எனும் தொனிப்பொருளில் RTI…

By In
News

சிறுவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் பொறிமுறை வலுப் பெற வேண்டும்!

வீ.பிரியதர்சன் சிறுவர் பாதுகாப்பு என்பது ஒரு கூட்டுப்பொறுப்பு, பிரச்சினைகளுக்குரிய தீர்வைப் பெறவே அனைவரும் முயற்சிக்கின்றனர். ஆனால் பிரச்சினைகள் வரும் முன் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை. இதற்கு முக்கிய…

By In
News

பொருளாதார நெருக்கடியால் தொழில்தேடி வெளிநாடு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ந.லோகதயாளன் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பின்னர் தொழில்வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதை தகவல் அறியும் சட்டத்தின் கீழ்  மாவட்டச் செயலகங்கள் மற்றும் வெளிநாட்டு…

By In
News

நுவரெலியாவில் சட்டவிரோதமான கட்டுமானங்களின் பின்னணியில் அரசியல் அதிகாரமா?

ஆர்.எப்.எம் சுஹேல்- நுவரெலியா உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த வேட்பாளர்கள் உட்பட பலரது வீடுகள் உரிய விதிமுறைகளைப் பேணாது சட்டவிரோதமான முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *